
குரு பெயர்ச்சி 2022 - 2023 எப்போது ? Guru Peyarchi Palangal in Tamil
திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு ஆவணி மாதம் 29-ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பகல் 02.22 மணியளவில் மகர ராசிக்கு திரும்புகிறார். மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் குருபகவான் ஐப்பசி 27-ஆம் தேதி அதாவது நவம்பர் 13-ஆம் தேதி சனிக்கிழமை நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29-ஆம் தேதி ஏப்ரல் 14-ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார். ஆகவே குரு பகவான் மகரம், கும்பம், மீனம் ஆகிய மூன்று ராசிகளில் பயணம் செய்வதால் இந்த பயணத்தின் போது குரு பகவான் பார்வையிடும் ராசிகள் என்னென்ன மற்றும் அந்த ராசிகளுக்கு என்ன அதிர்ஷ்டங்களை வழங்க இருக்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

மேஷம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து
ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும்
ஏழாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தையும்
ஒன்பதாம் பார்வையின் மூலமாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
தடைகளை வெற்றி கற்களாக மாற்றக்கூடிய மேஷ ராசி அன்பர்களே!
இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் ராசிக்கு பனிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் ‘குரு பார்வை கோடி புண்ணியம்’ என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சியான தருணங்களும், ஒத்துழைப்பான சூழ்நிலைகளும் உருவாகும். முன்னேற்றமான சிந்தனைகளும் அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும். எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்பட்டு மறையும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. மனதளவில் இருந்துவந்த பலவிதமான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களும், அலைச்சல்களும் ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்த நிலைகள் படிப்படியாக குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு சாதகமான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வாகன வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கைகூடும்.
பெண்களுக்கு :
புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப பெரியவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒத்துழைப்பும் மேம்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலைகள் படிப்படியாக குறையும். உயர்நிலை கல்வியில் முயற்சிக்கு ஏற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சில காரியங்கள் கைகூடும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு புதிய பயிர் விளைச்சல் நிமிர்த்தமான ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பயிர்களின் விளைச்சலால் வருவாய் மேம்படும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான எண்ணங்களும், கற்பனை வளங்களும், படைப்பாற்றலும் வெளிப்பட்டு பலரின் பாராட்டுக்களை பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோக பணிகளில் இருந்துவந்த சோர்வும், மந்தத்தன்மையும் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் மேன்மை ஏற்படும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். கணினி மற்றும் கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புகளின் மூலம் லாபங்கள் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். கொடுக்கல், வாங்கலில் இருப்பவர்கள் நபர்களின் தன்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும்.
நன்மைகள் :
இந்த குருபெயர்ச்சியால் சிந்தனைகளில் புதிய மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும்.
கவனம் :
நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதிற்குள் ஏதோ ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர தடைகளும், குழப்பங்களும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

ரிஷபம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
ரிஷபம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும்.. ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும்.. ஒன்பதாம் பார்வையின் மூலமாக களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே!!
வருகின்ற குருபெயர்ச்சியில் குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்து லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்.
குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் ‘குரு பார்வை கோடி புண்ணியம்’ என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். குலதெய்வம் மற்றும் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக எண்ணங்களும், வாய்ப்புகளும் கைகூடும். பத்திரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாகப்பிரிவினை விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். காதில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் குறையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் மேம்படும். உங்களை பற்றிய மற்றவர்களின் கண்ணோட்டங்களில் மாற்றங்கள் காணப்படும். தோற்றப்பொலிவுகளில் மாற்றங்கள் ஏற்படும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலைகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரம் மற்றும் அழகு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உருவாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாய பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறைந்து முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வாகனம் மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் குறிப்புகள் மூலம் விளைச்சலை மேம்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்களும், முயற்சிகளும் கைகூடும். புதுவிதமான காதணிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சிலருக்கு உத்தியோக பணிகளில் உயர்வும், முன்னேற்றமும் ஏற்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கதை மற்றும் கட்டுரைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். முயற்சிக்கேற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்வியில் தகுந்த ஆலோசனைகள் மூலம் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். கட்சி நிமிர்த்தமான உயரதிகாரிகளின் தொடர்புகள் ஏற்படும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்கள் மீது இருந்த வதந்திகள் நீங்கி நம்பிக்கை மேம்படும். உடனிருந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் மறைமுக ஆதரவு ஏற்படும்.
வியாபாரிகளுக்கு :
புதிய வியாபாரம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
நன்மைகள் :
இந்த குருபெயர்ச்சியின் மூலம் செய்யும் முயற்சிகளில் முன்னேற்றமும், புதுவிதமான சிந்தனைகளும், சுபகாரியம் தொடர்பான எண்ணங்களும் கைகூடும்.
கவனம் :
இந்த குருபெயர்ச்சியின் மூலம் எதிர்பாராத சில தகவல்களால் விரயங்கள் உண்டாகும்.
பரிகாரம் :
வியாழக்கிழமைதோறும் குருமார்களை வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

மிதுனம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
மிதுனம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரைகுருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு தனது காரியத்தை சாதித்து கொள்ளக்கூடிய மிதுன ராசி அன்பர்களே!!
வருகின்ற குருபெயர்ச்சியில் குருபகவான் பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் இடத்தில் இருந்து தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்.
குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் ‘குரு பார்வை கோடி புண்ணியம்’ என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதை உறுத்தி கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.
விலகி இருந்தவர்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களின்போது எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும்.
பொருளாதாரம் :
தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சொத்து சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்ப்புகளால் உண்டான காரியத்தடைகள் அகலும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் கைகூடும். சகோதரர் வகையில் சுபவிரயங்கள் உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த சில பயணங்கள் சாதகமாக அமையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்வி தொடர்பான வெளிநாட்டு வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதிய நம்பிக்கையை உருவாக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
வெளியூர் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில இடமாற்றங்களின் மூலம் அலைச்சலும், புதிய அனுபவமும் உண்டாகும். சிறு வாய்ப்பாக இருந்தாலும் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மாற்றங்கள் பிறக்கும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.
விவசாயிகளுக்கு :
விளைச்சலுக்கு உண்டான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான இயந்திரங்கள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பகை உணர்வை மறந்து அனைவரிடத்திலும் சமமாக பழகுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
வியாபாரிகளுக்கு :
தொழில் சார்ந்த இடங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை சீர் செய்வது நல்லது. வழக்கு சார்ந்த விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் கையாளுவது மேன்மையை ஏற்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி நிமிர்த்தமான பணிகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். மற்றவர் விஷயங்களில் உங்களின் அதிகாரங்களை பயன்படுத்துவதை குறைத்து கொள்வது நல்லது. நெருக்கமானவர்களின் மூலம் புதிய அனுபவமும், பக்குவமும் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்வதை குறைத்து கொள்வது நல்லது. பத்திரிக்கை சார்ந்த துறைகளில் செய்திகளின் தன்மையையும், உண்மை நிலையையும் அறிந்து செயல்பட வேண்டும்.
நன்மை :
இந்த குருபெயர்ச்சியின் மூலமாக உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உறவுகள் பற்றிய புரிதலும், நெருக்கமானவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகளும் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும்.
கவனம் :
இந்த குருபெயர்ச்சியின் மூலம் தொழில் சார்ந்த விஷயங்களில் அபிவிருத்தி தொடர்பான செயல்பாடுகளிலும், புதிய முதலீடுகளிலும் சிந்தித்து செயல்படவும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் சித்தர்களை வழிபாடு செய்துவர தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

கடகம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
கடகம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருவானவர் தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக ஜென்ம ராசியையும் ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
விவேகமான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கடக ராசி அன்பர்களே!!
வருகின்ற குருபெயர்ச்சியில் அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் பாவகத்தில் பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் ‘குரு பார்வை கோடி புண்ணியம்’ என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இளைய சகோதரி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். செயல்பாடுகளில் துரிதமும், வேகமும் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள்.
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்களின் தன்மைகளை அறிந்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய செயல்களை நிறைவேற்றி கொள்வீர்கள்.
பெண்களுக்கு :
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மதிப்பும், மரியாதையும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த தயக்கமும், கூச்சமும் விலகி தெளிவுடன் காணப்படுவீர்கள். உயர்கல்வி நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலை ஏற்படும். அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கவும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். கூட்டாளிகள் வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். போட்டிகள் குறைந்து முயற்சிக்கு உண்டான பலன்களை பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் சார்ந்த துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு சார்ந்த உதவிகளில் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். அடமானம் வைத்திருந்த சில பொருட்களை மீட்டு எடுப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
சமூக பணிகளில் இருப்பவர்கள் புதுவிதமான சிந்தனைகளுடன் காணப்படுவீர்கள். புதிய முடிவுகளின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். பேச்சுக்களில் வேகம் அதிகரிக்கும். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்து கொள்வது மேன்மையை ஏற்படுத்தும்.
கலைஞர்களுக்கு :
எழுத்து சார்ந்த துறைகளில் இருக்கக்கூடியவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். ஊடகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
நன்மைகள் :
இந்த குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் நினைத்த காரியங்களை திட்டமிட்டு, நுட்பமான செயல்பாடுகளின் மூலம் நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கவனம் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் தந்தைவழி உறவுகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் ஹயக்ரீவரை வழிபாடு செய்துவர சிந்தனைகளில் தெளிவும், உற்சாகமும் ஏற்படும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

சிம்மம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
சிம்மம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருவானவர் தாம் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக விரய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும்
ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
எதிலும் துரிதத்துடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!!
வருகின்ற குருபெயர்ச்சியில் குருவானவர் சிம்ம ராசிக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் இருந்து, அஷ்டம தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
பொருளாதாரம் :
தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வாடகை மற்றும் குத்தகை தொடர்பான பாக்கிகள் வசூலாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பாதியில் நின்ற கட்டிடம் தொடர்பான பணிகளை நிறைவு செய்வீர்கள்.
பெண்களுக்கு :
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உருவாகும். வாழ்க்கை துணைவரை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குழந்தைகள் வழியில் சில விரயங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டி தேர்வுக்கு ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். வங்கி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகளும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். உயரதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தேவையற்ற சஞ்சலங்கள் நீங்கி மனநிம்மதியான சூழல் உருவாகும். பழைய வாகனங்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு தனவரவுகள் சாதகமாக அமையும். கால்நடை தொடர்பான வியாபாரங்களில் லாபங்கள் மேம்படும். கணினி சார்ந்த துறைகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மையான சூழ்நிலை காணப்படும். புதிய கால்நடை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் கட்சி தொடர்பான உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கட்சி நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடனிருப்பவர்களின் உதவிகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ணிய செயல்களை செயல்படுத்துவதில் சில எதிர்ப்புகளால் காலதாமதமாகி நிறைவேறும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவங்களும், விரயங்களும் உண்டாகும். வித்தியாசமான கலை ரசனை மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.
நன்மைகள் :
வர இருக்கின்ற குருப்பெயர்ச்சியின் மூலமாக புதுவிதமான பயணங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகளாலும், புத்துணர்ச்சியான சிந்தனைகளாலும் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள்.
கவனம் :
வர இருக்கின்ற குருப்பெயர்ச்சி மூலமாக எதிர்காலம் மற்றும் தனம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குலதெய்வ வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
கன்னி ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக ஜென்ம ராசியையும் ஒன்பதாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
கனிவான பேச்சுக்களின் மூலம் காரியங்களை சாதிக்கக்கூடிய கன்னி ராசி அன்பர்களே…!
வருகின்ற குருபெயர்ச்சியில் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளும், வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். மனதில் நீண்ட நாட்களாக நினைத்திருந்த சில காரியங்கள் கைகூடி வரும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பொருளாதாரம் :
பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான தருணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு :
உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாகப்பிரிவினையில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சகோதர உறவுகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தகவல் தொடர்புத்துறை சார்ந்த கல்வியில் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். மனை விற்பது, வாங்குவது மற்றும் உணவு சார்ந்த வியாபாரங்களில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வரப்பு தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு :
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழ்நிலைகள் காணப்படும். உங்களின் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிகள் உண்டாகும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சாதகமாக அமையும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். வயதில் மூத்தவர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். மறைமுகமான சிறு முயற்சிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். வித்தியாசமான சிந்தனைகளுடன் அங்கீகாரங்களும், பாராட்டுகளும் கிடைக்கும்.
நன்மை :
இந்த குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் நினைத்து எண்ணங்களை செயல் வடிவில் மாற்றி, செல்வாக்கினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
கவனம் :
இந்த குருபெயர்ச்சியில் நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர தம்பதியர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

துலாம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
துலாம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தையும் ஏழாவது பார்வையாக விரய ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையின் மூலமாக பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
எதிலும் நடுநிலை தன்மையுடன் செயல்படக்கூடிய துலாம் ராசி அன்பர்களே…!
வருகின்ற குருபெயர்ச்சியில் ஐந்தாம் ஸ்தானமான புத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
குடும்ப உறுப்பினர்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மற்றவரின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் வழியில் சில விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிகை அலங்காரம் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆலயம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் அமையலாம். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கையிருப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் :
பயனற்ற பயணங்களை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள்.
பெண்களுக்கு :
கணவன்-மனைவிக்கிடையே பொறுமையை கையாளவும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பூமி மற்றும் கால்நடை தொடர்பான விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். கணிதம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் பாடங்களை சற்று கவனத்துடன் படிக்க வேண்டும். புதிய நண்பர்களின் அறிமுகம் மாற்றத்தை உருவாக்கும். நபர்களின் தன்மைகளை அறிந்து பழகுவது மேன்மையை ஏற்படுத்தும். விளையாட்டுப் போட்டிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சுத்திறனை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான கலைகளை கற்பதில் ஆர்வமும், ஆசையும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோக பணிகளில் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். திறமைக்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் காலதாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், அவர்களைப் பற்றிய புரிதலும் மேம்படும். மற்றவர்களை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதில் சிந்தித்து செயல்படவும். கிடைக்கும் சிறு தொகையாக இருந்தாலும் அதனை பாதுகாத்து மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் இருந்துவந்த சோர்வுகளும், மந்தத்தன்மையும் படிப்படியாக குறையும். நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் மேம்படும். அரசு தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபார அபிவிருத்தி தொடர்பான முதலீடுகள் மேம்படும். ஆபரணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான பலன்களும், ஆலோசனைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். விளைச்சலுக்கு உண்டான லாபம் கிடைக்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். பாசனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுகமான ஒத்துழைப்புகள் நம்பிக்கையை உருவாக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பதவிகளும், உயர்வான வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய யோசனைகளை செயல்படுத்தி ஆதரவுகளை மேம்படுத்துவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கட்சி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில யோகங்கள் உண்டாகும். மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் புதிய நுட்பங்களை கையாளுவீர்கள். எப்பொழுதும் பொலிவுடனும், மகிழ்ச்சியான சூழ்நிலைகளுடனும் காணப்படுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறப்பு விருந்தினராக கல்வி தொடர்பான நிறுவனங்களுக்கு சென்று வருவீர்கள்.
நன்மை :
இந்த குருபெயர்ச்சியின் மூலமாக குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பின் மூலம் வியாபார பணிகளில் மேன்மையை உருவாக்கி புதிய இலக்குகளையும், அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளையும் செய்வீர்கள்.
கவனம் :
இந்த குருபெயர்ச்சியின் மூலம் செய்கின்ற சில பணிகளில் தடைகளும், உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகளும் காணப்படும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் காலபைரவரை வழிபாடு செய்துவர கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

விருச்சிகம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
விருச்சிகம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தையும் ஏழாவது பார்வையாக லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தையும்
ஒன்பதாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.
எதிலும் சுறுசுறுப்புடனும், வேகமாகவும் செயல்படக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே!!
இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு குருபகவான் நான்காம் ஸ்தானமான சுக ஸ்தானத்தில் இருந்து புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் நீங்கி சுதந்திர போக்குடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கோயில் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். புதுவகையான தேடல்கள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மருத்துவம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமும், ஆர்வமும் அதிகரிக்கும். மூத்த சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வேளாண்மை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும்.
பொருளாதாரம் :
இதுவரை தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குழந்தைகள் வழியில் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். வருவாய் மேம்படுத்துவது தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பேச்சுக்களில் புதுவிதமான புத்துணர்ச்சி ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு சுபகாரியம் தொடர்பான செயல்கள் கைகூடும். தந்தைவழி உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலை மறையும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோக பணிகளில் எதிர்பார்த்திருந்த பயண வாய்ப்புகள் கைகூடும். முயற்சிக்கேற்ப புதிய பொறுப்புகளும், உயர்வான சூழ்நிலைகளும் காணப்படும். பணி மாற்றம் தொடர்பான முயற்சிகளில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து சிந்தித்து செயல்படுவது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உருவாகும். கற்ற கல்விக்கு உண்டான தொழில் வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் அலைச்சலுக்கு பின் தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முதலீடுகளில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். சுற்றுலா தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபங்கள் ஏற்படும். கால்நடை மற்றும் மனை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். விளைச்சலுக்கு உண்டான தனவரவுகள் கிடைப்பதில் இழுபறியான சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டு மறையும். நீண்ட நாட்களாக மனையில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பங்காளி உறவினர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு தனவரவுகள் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். செல்வச்சேர்க்கை மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் புத்துணர்ச்சியுடனும், புதுப்பொலிவுடனும் காணப்படுவீர்கள். உங்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். உங்களின் மீதிருந்த வதந்திகள் குறைந்து செல்வாக்கு மேம்படும்.
நன்மைகள் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். செயல்பாடுகளின் மூலம் வெளிவட்டார தொடர்புகளை விரிவுபடுத்தி லாபகரமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள்.
கவனம் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் குழந்தைகள் மற்றும் உயரதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் எல்லை சுவாமிகளை வழிபாடு செய்துவர பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த இடர்பாடுகள்
நீங்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

தனுசு ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
தனுசு ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தையும் ஏழாவது பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தையும்
ஒன்பதாம் பார்வையாக விரய ஸ்தானமான பனிரெண்டாம் ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.
எதிலும் பொறுமையுடன் செயல்பட்டு மேன்மையை உருவாக்கக்கூடிய தனுசு ராசி அன்பர்களே!!
இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு முயற்சி ஸ்தானம் என்னும் மூன்றாம் பாவகத்தில் இருந்து சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திற்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தமான சூழ்நிலை காணப்படும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் அனுகூலமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்டநாள் தடையாக இருந்துவந்த சுபகாரியம் தொடர்பான முயற்சிகளும், தனவரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமான சூழ்நிலை காணப்படும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை காணப்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றங்கள் உருவாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சிலருக்கு பொருட்சேர்க்கை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செயல்படுத்துவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீது இருந்துவந்த மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
பொருளாதாரம் :
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஆதாயமடைவீர்கள். இணையம் சார்ந்த முதலீடுகளில் திடீர் திருப்பங்கள் காணப்படும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாராத வாகன பயணங்களில் அலைச்சல்களும், சோர்வும் உண்டாகும்.
பெண்களுக்கு :
கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மறைமுகமான ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுயதொழிலில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைவீர்கள். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறைந்து முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். மனதில் தோன்றும் இனம்புரியாத சிந்தனைகளை தாயிடம் கலந்து உரையாடுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோக பணிகளில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகம் சார்ந்த நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறைந்து முன்னேற்றம் உண்டாகும். புதிய கிளைகள் தொடங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைக்கேற்ப புதிய முதலீடுகளை மேற்கொள்வது நல்லதொரு மாற்றத்தையும், புதிய அத்தியாயத்தையும் உருவாக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
விவசாயிகளுக்கு :
விவசாயத்துறையில் பெரியோர்களின் ஆலோசனைகள் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும். வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பணப்பயிர் மற்றும் எண்ணெய் வித்துகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். எண்ணிய விதத்தில் செயல்களை செய்து முடிப்பீர்கள். எந்தவொரு விஷயத்திலும் லாபமும், ஆதாயமும் ஏற்படும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்றமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் செய்கின்ற முயற்சிக்கேற்ப முன்னேற்றத்தை உருவாக்க இயலும். உங்களின் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
நன்மைகள் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலம் நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்கள் கைகூடும்.
கவனம் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலம் மனதளவில் பலதரப்பட்ட சிந்தனைகளினால் குழப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் சித்தர்களை வழிபாடு செய்துவர சிந்தையில் இருக்கக்கூடிய குழப்பங்கள் நீங்கி தெளிவு புத்துணர்ச்சியும் பிறக்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

மகரம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
மகரம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தையும் ஏழாவது பார்வையாக பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தையும்
ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தையும் பார்க்கின்றார்.
எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி காணக்கூடிய மகர ராசி அன்பர்களே…!
இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் பாவகத்தில் இருந்து முயற்சி ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கூட்டு வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மறுமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவினால் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை மேம்படும்.
உடல் ஆரோக்கியம் :
ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சளி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நபர்களின் தன்மையை அறிந்து நட்பு கொள்வது நல்லது. வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
தவறிப்போன சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
வியாபாரிகளுக்கு :
ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆடம்பரப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு :
குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். காலநிலை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் மேம்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு நிம்மதியான தூக்கமும், தனவரவும் உண்டாகும். அரசு சார்ந்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பார்த்த உதவியின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நன்மைகள் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சி மூலமாக வாழ்க்கை துணைவரின் அன்பையும், அரவணைப்பையும் பெறுவீர்கள். மேலும் பெரியோர்களின் ஆதரவோடு செல்வச்சேர்க்கையும், சுபிட்சத்தையும் மேம்படுத்துவீர்கள்.
கவனம் :
வர இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் எந்தவொரு பணியையும் செய்வதற்கு முன்பு திட்டமிட்டு செயல்படுவது புதிய அனுபவத்தையும், புரிதலையும் ஏற்படுத்தும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் பிரத்தியங்கரா தேவியை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

கும்பம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
கும்பம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும்,
ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய கும்ப ராசி அன்பர்களே…!
இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசியில் இருந்துவந்த குருவானவர் தன ஸ்தானமான இரண்டாம் பாவகத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்.
குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தடைபட்ட உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பொருளாதாரம் :
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பணவரவுகளில் இருந்துவந்து தடை, தாமதங்கள் நீங்கும். சேமிப்பினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மூத்த சகோதரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் குறையும். வாழ்க்கை துணைவர் வழியில் வரவுகளும், ஒத்துழைப்புகளும் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு :
தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி வாய்ப்புகளை பெறுவீர்கள். வெளிநாடு மற்றும் வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேளாண்மை மற்றும் வங்கி சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உபரி வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். வங்கி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
புதிய தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். பெரிய அளவிலான முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். வியாபார நுட்பங்களை மற்றவரிடம் பகிராமல் இருப்பது நல்லது.
விவசாயிகளுக்கு :
கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் உருவாகும். பூக்கள் மற்றும் வாசனை திரவியங்களின் மூலம் மேன்மை ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், கௌரவப் பதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறு மற்றும் பெரும் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், கீர்த்திகளும் ஏற்படும்.
நன்மைகள் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலமாக தமக்கு எதிராக செயல்பட்டவர்களை வீழ்த்தி, பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டு புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
கவனம் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதையும், வாக்குறுதிகள் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர முன்னேற்றமான சிந்தனைகளும், அதற்குண்டான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

மீனம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
மீனம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை
குருதேவர் தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.
பொறுமை குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே…!
இந்த வருட குருபெயர்ச்சியில் இதுவரையில் மீன ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :
திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இதுவரை மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி புத்துணர்ச்சியும், தெளிவும் பிறக்கும். குடும்பத்துடன் இணைய நினைத்தவர்களுக்கு எண்ணங்கள் கைகூடும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கருத்து வேறுபாடுகளும் குறையும். திருப்பணி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உறவினர்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
உடல் ஆரோக்கியம் :
உடல் ஆரோக்கியம் மற்றும் பயணம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு :
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் வழியில் மேன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு :
அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களிடம் அளவுடன் பழகுவது நல்லது. நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ற உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோக பணிகளில் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வுகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு :
பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் ஆதாயமடைவீர்கள். அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாயம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். அரசு தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாவட்டம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். உயர்மட்ட மக்களிடத்தில் பிரபலம் அடைவீர்கள். திறமைக்குண்டான விருதுகளும், பாராட்டுகளும் சாதகமாக அமையும்.
நன்மைகள் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் தோன்றும் புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவமாக மாற்றுவதற்கு உண்டான வாய்ப்புகளும், பெரியோர்களின் அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கவனம் :
வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.